சிங்கை-திபெத் ரயில்வே நெடுங்கில் சுற்றுலா திட்டம்
cri
சிங்கை-திபெத் ரயில்வே சுற்றுலாத் திட்டத்தை வரையும் பணி ஆகஸ்ட் திங்களின் நடுப்பகுதியில் அதிகாரப்பூர்வமாக துவங்கும். சுற்றுலா மூலம் வறுமையை ஒழிப்பதும், மண்டல பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதும், இத்திட்டத்தின் கொள்கையாகும். அடுத்த ஆண்டின் மார்ச்சு திங்களுக்குள் இத்திட்டம் வகுக்கப்பட்டுவிடும் என்று திபெத் வணிக ஏடு இன்று அறிவித்தது. சிங்கை-திபெத் ரயில்வே, தற்போது உலகில் கடல்மட்டத்திலிருந்து மிக உயரமான பீடபூமியில் உள்ள ரயில்வே ஆகும். இவ்வாண்டிற்குள் இது முழுவதுமாக போக்குவரத்திற்கு திறந்துவிடப்படும். ரயில்வே பாதையில் உலக நிலை இயற்கை காட்சித்தலங்களும் மானிடவியல் காட்சித் தலங்களும் நிறைய இருக்கின்றன.
|
|