சீனாவின் திபெத் பண்பாட்டுக் கருத்தரங்கு இன்று பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனா, அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 120 திபெத்தியல் நிபுணர்களும், பிரமுகர்களும் திபெத் பண்பாட்டு பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி பற்றி விவாதித்தனர். இக்கருத்தரங்கில், பரிமாற்றம், பண்பாட்டுப் பொருட்காட்சி முதலியவை இடம்பெறுகின்றன. இன்று முதல் 22ம் நாள் வரை, சீனாவின் கருவூலம் என்னும் திபெத் பண்பாட்டு பொருட்காட்சி, பெய்ஜிங்கிலுள்ள கேப்டோ அருங்காட்சியகத்தில் நடைபெறுகிறது.
இதில் 500க்கு கூடுதலான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கருத்தரங்கு நிறைவடைந்த பின், பிரதிநிதிகள் சிலர், சிங்ஹேய்-திபெத் ரயில் போக்குவரத்து மூலம், திபெத்திற்குச் சென்று பார்வையிடுவார்கள்.
|