கடந்த ஆண்டின் இறுதி வரை, சீனாவின் கிராமங்களில், நீர் மின்னாக்கிகளின் மொத்த ஆற்றல் 5 கோடி கிலோவாட்டை எட்டியுள்ளது. இவற்றின் ஆண்டு மின் உற்பத்தித் திறன் 15 ஆயிரம் கோடி கிலோவாட் மணியை தாண்டியுள்ளது. சீனாவின் மின்னாற்றல் விநியோகத்தில் இது முக்கிய பகுதியாக மாறியுள்ளது. சீன நீர் சேமிப்பு அமைச்சகத்தின் புள்ளி விபரம் இதை காட்டுகின்றது. கிராமங்களில், நீர் மின்னாற்றலை வளர்த்து, நீர் வளத்தை பயன்தரும் முறையில் பயன்படுத்துவது என்பது, கிராமங்களின் மின் பயன்பாட்டு பிரச்சினையைத் தீர்த்து, விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான பயன்மிக்க வழிமுறையாகும். இது மட்டுமல்ல, கிராமங்களில் எரியாற்றல் கட்டமைப்பை மேம்படுத்தி, காடுகளை பாதுகாத்து, புதிய கிராமங்களை உருவாக்குவதற்கான முக்கிய நடவடிக்கையுமாகும் என்று நீர் சேமிப்பு அலுவலகத் தலைவர் Tian Zhong Xing கூறினார். இவ்வாண்டு, கிராமங்களில் நீர் மின்னாற்றல் லட்சியத்தை சீனா தொடர்ந்து பெரிதும் வளர்க்கும். புதிய மின்னாக்கிகளின் ஆற்றலை, 60 லட்சம் கிலோவாட்டுக்கு மேல் நிலைநிறுத்தும்.
|