பெய்சிங்-ஷாங்காய் உயர் வேக இருப்புப்பாதை
cri
தற்போது, சீனாவில் பயணிகளை ஏற்றிச்செல்வதற்கான இருப்புப்பாதை கட்டுமானம் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. பெய்சிங்கையும், ஷாங்காயையும் இணைக்கும் உயர் வேக இருப்புப்பாதையின் கட்டுமானம் விரைவில் துவங்கும் என்று சீன இருப்புப்பாதை அமைச்சர் Liu Zhi Jun கூறியுள்ளார். இன்று பெய்சிங்கில் தேசிய இருப்புப்பாதை அறிவியல் தொழில் நுட்ப மாநாட்டில் அவர் இவ்வாறு கூறினார். கடந்த 10 ஆண்டுகளாக ஆயத்தம் செய்யப்பட்ட பெய்சிங்-ஷாங்காய் உயர் வேக இருப்புப்பாதைக்கு, கடந்த ஆண்டின் மார்ச் திங்கள் சீன அரசவை அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்தது. திட்டத்தின் படி, இத்தொடர் வண்டி மணிக்கு 350 கிலோமீட்டர் ஓடலாம். இதற்கு சுமார் 13 ஆயிரம் கோடி யுவான் முதலீடு செய்யப்படும். தவிர, பெய்சிங்கிலிருந்து Tian Jinக்கு செல்லும் இருப்புப்பாதை, அடுத்த ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறுவதற்கு முன் போக்குவரத்துக்குத் திறந்து விடப்படும். இத்தொடர் வண்டியின் வேகம் மணிக்கு 300 கிலோமீட்டராகும் என்று Liu Zhi Jun விளக்கிக்கூறினார்.
|
|