சீனாவில் பேரிடர் நீக்கப் பணியில் சாதாரணப் பதவிகளில் இருந்துகொண்டு சிறந்த பணிகளை புரிந்த வீரர்கள் இருவர் பாராட்டப்பட்டுள்ளனர். வென்ச்சுவான் நிலநடுக்கம் நிகழ்ந்தவுடன் முதலாவது தொலைபேசி செய்தி வழங்கிய liudaobin, beichuan நகரத்தை பாதுகாத்தவரில் ஒருவரான xugenfa ஆகியோரை இன்று வெளியிட்ட மக்கள் நாளேடு பாராட்டியது.
39 வயதான liudaobin, சீன தொலைத் தொடர்பு வென்ச்சுவான் தொழில் நிறுவனத்து கிளையின் பணியாளராவார். மே திங்கள் 12ம் நாள், வென்ச்சிவான் நிலநடுக்கம் ஏற்ப்பட்டவுடன், அவர் அபாயத்தை பொருட்படுத்தாமல், கடலில் பயன்படுத்தப்பட கூடிய தொலைபேசியைப் பாதுகாத்தது மட்டுமல்ல, அத்தொலைபேசி மூலம் உயிர் காக்க குரல் எழுப்பினர். அதற்குப் பின், தனது சொந்த பதவியில் இடைவிடாமல் ஊன்றி நின்றுள்ளனர்.
53 வயதான xugenfa, mianyang நகரத்தின் இடர்காப்பு ஆணையத்தின் காவல்துறையினரில் ஒருவராவர். ஜூன் திங்கள் 5ம் நாள் வரையான 15 நாட்களாக, அவர் பணிப் பதவியில் ஊன்றி நின்றுள்ளார். Tangjia மலையின் நிலநடுக்கத்தால் உடைந்த ஏரியின் நிலைமை தொடர்ந்து அபாயகரமாக மாறியுள்ளது. அந்நகரத்திலுள்ள தொடர்புடைய பணியாளர்கள் படிப்படியாக வெளியேறிய பின், beichuan நகரத்தைப் பாதுகாத்தவர்களில் இறுதியவராக அவர் மாறினார்.
|