சீனாவின் Gansu மாநிலத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் பேரிடர் மீட்புதவி நடவடிக்கைகளை இந்தோனேசியாவின் சர்வதேச மருத்துவ சிகிச்சைக் குழு முடித்துவிட்டு, நேற்று பிற்பகல் அம்மாநிலத்தை விட்டு வெளியேறியது என்று Gansu மாநிலத்தின் wen மாவட்ட தகவல் தெரிவித்தது.
இச்சர்வதேச மருத்துவ சிகிச்சைக் குழு, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட longnan பிரதேசத்தில் பொது மக்களால் அதிகமான வரவேற்கப்பட்டது. நேற்று முற்பகல், இக்குழு புறப்படுவதற்கு முன், பிரதேசத்திலிருந்து வந்த அதிகமான பொது மக்கள் மலை இக்குழு ஊழியர்களின் சிகிச்சைகளை பெற விரும்பினர்.இந்தோனேசியாவின் சர்வதேச மருத்துவ சிகிச்சைக் குழுவின் 22 ஊழியர்கள் மே திங்கள் 30ம் நாள் gansu மாநிலத்தின் longnan சென்றனர். Longnan பிரதேசத்தில் தங்கிய போது, அவர்கள் சுமார் 200 பொது மக்களுக்கு மருத்துவச் சிகிச்சை வழங்கி, 7 பேருக்கு அறுவை சிகிச்சை அளித்தனர்.
|