• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-03 10:35:22    
சிறப்பு கட்டுப்பாட்டின் இலக்கு மற்றும் கடமை

cri

சிறப்பு கட்டுப்பாட்டின் இலக்கு மற்றும் கடமை. நாடு முழுவதில் உணவு பொருட்களை தயாரிப்புத் துறையில் சட்டப்படி உட்கொள்ள முடியாத பொருளை சேர்ப்பதற்கு தண்டனை விதித்து உட்சேர்க்கைப் பொருளை சேர்வதை கட்டுப்படுத்தி மக்களின் உடல் பாதுகாப்பை உண்மையாக கவனிப்பது கட்டுப்பாட்டு நடவடிக்கையின் நோக்கமாகும். ஒருங்கிணைந்த முறையில் உள்ளூர் அரசாங்களின் பொறுப்பிலும் வாரியங்களின் கட்டுப்பாட்டிலும் பல்வேறு தரப்புகள் கூட்டாக இந்த உணவுப் பாதுகாப்பு பிரச்சினையை தீர்க்கும் பணி முறை நிறைவேறியுள்ளது. நான்கு திங்களில் மூன்று பகுதிகளாக சட்டம் மீறியதை தாக்கும் அதேவேளையில் உட்சேர்க்கைப் பொருள் உற்ப்பத்தி மற்றும் பயன்பாட்டு மீதான நீண்டகால கண்காணிப்பு முறையின் கட்டுமானத்தையும் பல்வேறு நடவடிக்கைகளையும் பணியாளர்கள் நடைமுறைப்படுத்தியுள்ளனர். கடந்த டிசெம்பர் 10ம் நாள் முதல் 2009ம் ஆண்டு ஜனவரி 10ம் நாள் வரையான முதலாவது கட்டத்தில் துறைகளில் தற்சோதனை செய்து திருத்தப்படும். இரண்டாவது கட்டத்தில் கட்டுப்பாட்டுப் பணியை ஆழமாக சரிபடுத்தப்படும். இது ஜனவரி 11ம் நாள் முதல் மார்ச் 10ம் நாள் வரை நிறைவேற்றப்படும். மூன்றாவது கட்டத்தில் சாதனைகளை உறுதிப்படுத்தி நீண்டகால பயன் விளையும் அமைப்பு முறை நிறுவப்படும். இது மார்ச் 11ம் நாள் முதல் ஏப்ரல் 10ம் நாள் வரையான காலத்தில் நிறைவேற்றப்படும்.

இனி சட்டம் மீறி உட்சேர்க்கைப் பொருளை சேர்ப்பது கட்டுப்படுத்தப்பட்டு பயன் காணப்பட்டுள்ளது. கடந்த டிசெம்பர் திங்கள் சிற்ப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கை துவங்கிய பின் சுகாதார அமைச்சகம் தலைமையிலான சிறப்பு கட்டுப்பாட்டுக் குழு திட்டத்தை வகுத்து தற்சோதனை செய்யும் அறிக்கை வெளியிட்டு "கருப்பு பட்டியலில்" சட்டம் மீறும் 21 உட்சேர்க்கைப் பொருட்களையும் கட்டற்ற முறையில் உட்சேர்க்கைப் பொருளாக பயன்படுத்தப்படும் 14 பொருட்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஜனவரி திங்களின் இறுதி வரை சீனாவில் 7 இலட்சத்து 70 ஆயிரம் பேர் இந்த நடவடிக்கைகளில் பங்கு எடுத்துள்ளனர். 13 இலட்சத்து 60 ஆயிரத்துக்கும் அதிகமான உணவுப் பொருட்களையும் உட்சேர்க்கைப் பொருட்களையும் தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள் சோதனை செய்யப்பட்டன. மக்களிடமிருந்து வந்த ஆயிரத்து 394 புகார்கள் கையாள்ளப்பட்டன. 1274 வழக்குகள் சோதனையிடப்பட்டு தண்டனை செய்யப்பட்டன. சட்டம் மீறியவர் என ஐயத்துக்குரிய 7 பேர் இடர்காப்பின் நீதி வாரியத்திற்கு ஒப்படைக்கப்பட்டனர். இவர்களில் 4 பேர் சட்டப்படி கைது செய்யப்பட்டனர். 

 கடைசியாக ஜுன் திங்கள் முதல் நாள் முதல் அமலாக்கத்திற்கு வரும் உணவுப் பாதுகாப்பு சட்டம். உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் 43 முதல் 48ம் வரையான விதிகளில் உட்சேர்க்கைப் பொருளின் அளவுக் குறிப்பு, உணவுப் பொருட்களின் மேல் தெளிவான விளக்க உரை முதலியவை தெள்ளதெளிவாக உணவுப் பொருட்கள் உள்ளடங்கிய பொட்டலின் மேல் குறிப்படப்படும். மந்தமான விளக்க உரை இருக்கின்ற உணவுப் பொருட்கள் சந்தை விற்பனைக்கு அனுப்ப தடுக்கப்படும்.