2008ம் ஆண்டு மே 12ம் நாள், சிச்சுவான் மாநிலத்தின் வென்சுவானில் ரிக்டர் அளவு கோலில் 8ஆக பதிவான கடும் நிலநடுக்கம் நிகழ்ந்தது. பல்லாயிரக்கணக்கானோர், இதில் உயிரிழந்தனர் அல்லது காணாமல் போயினர். இலட்சக்கணக்கானோர் காயமுற்றனர். மக்களின் அமைதியான வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இக்கடும் நிலநடுக்கம் நிகழ்ந்த ஓராண்டுக்குப் பின், பாதிக்கப்பட்ட சிச்சுவான் மாநிலத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இப்பிரதேசத்தில் சீரான புனரமைப்புப்பணிகள் நடைபெறுகின்றன. மனவுறுதி கொண்ட சிச்சுவான் மக்கள், பல்வேறு துறைகளின் உதவியுடன் மேலும் அருமையான வாழ்க்கைக்காக பாடுபட்டு வருவதை, தற்போதைய சிச்சுவான் எடுத்துக்காட்டுகிறது.
சிச்சுவானில் அண்மையில் செய்தியறிவிப்பு மற்றும் பேட்டிக்காக சென்ற செய்தியாளர்கள் இதை உறுதிபடுத்தியுள்ளனர். வென்சுவான் கடும் நிலநடுக்கம் நிகழ்ந்த ஓராண்டு நினைவை அனுசரிக்கும் வகையில் மே திங்கள் 5ம் நாள் முதல் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படும் என்பதை நினைவூட்டுகின்றோம்.
|