பிப்ரவரி 4ஆம் நாள் இலங்கை சுதந்திரம் பெற்றதன் 62வது ஆண்டு நிறைவு நாளாகும். அந்நாட்டின் பல்வேறு இடங்களிலும் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
அரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற Mahinda Rajapaksa கண்டி நகரில் நடைபெற்ற கொண்டாட்ட விழாவில் உரை நிகழ்த்துகையில், பல்வேறு தேசிய இனங்களும் ஒன்றுபட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அவர் கூறியதாவது—
"உரிமைப் பிரதேச ஒருமைப்பாட்டில் நான் வெற்றி பெற்றேன். தற்போது, பொது மக்கள் அனைவரையும் ஒன்றுபடச் செய்யும் கடமை எனக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த உன்னத பொறுப்பேற்று, அமைதியை உருவாக்க பாடுபடுவேன்" என்றார் அவர்.
வளர்ச்சிப் பாதைக்கு மீண்டும் திரும்புவதற்கு அமைதி மட்டும் போதாது. அடுத்த பதவிக்காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த உள்ளதாக அவர் மேலும் கூறினார்.




அனுப்புதல்




