வெளிநாட்டுச் செய்தி ஊடகங்களின் கவனம்
2010-03-13 19:21:54 cri எழுத்தின் அளவு: A A A
11வது சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டு தேசிய கமிட்டியின் 3வது கூட்டத் தொடர் 13ம் நாள் நிறைவடைந்தது. பல வெளிநாட்டுச் செய்தி ஊடகங்கள் இது பற்றி செய்திகளை வெளியிட்டன. அதேவேளையில், சீன உச்ச மக்கள் நீதி மன்றம் மற்றும் சீன உச்ச மக்கள் அரசு வழக்கறிஞர் மன்றத்தின் பணி அறிக்கைகளில் அவை கவனம் செலுத்தின.சர்வதேச நிதி நெருக்கடியைச் சமாளித்து, பொருளாதார அதிகரிப்பை நிலைநிறுத்த சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு தொடர்ந்து பாடுபடும் என்று இம்மாநாட்டின் தேசிய கமிட்டியின் தலைவர் ஜியா சிங்லின் உரையில் கூறியதாக அமெரிக்க AP நிறுவனம் அறிவித்தது.சீன மக்கள் கலந்தாய்வு மாநாடின் கூட்டத்தில் ஜனநாயகச் சூழ்நிலை மேலும் சீராக மாறியுள்ளது. அரசியலில் பங்கெடுக்கும் பொது மக்களின் ஆர்வமும் முன்கண்டிராதவாறு உயர்ந்துள்ளது என்று சீன வணிக செய்தி என்ற அமெரிக்காவின் ஏடு கூறியது. தவிர, பிரிட்டன், ஜப்பான் ஆகிய நாடுகளின் செய்தி ஊடகங்களும் இது பற்றி கட்டுரைகளை வெளியிட்டன.
தொடர்புடைய செய்திகள்