சீன மக்கள் தேசிய பேரவையின் ஆண்டு கூட்டத் தொடர் 14ம் நாள் முற்பகல் பல்வேறு நிகழ்ச்சி நிரல்களை நிறைவேற்றியதுடன் பெய்ஜிங்கில் இனிதே நிறைவடைந்தது. ஹுச்சின்தாவ், வூபாங்குவோ, வென்ச்சியாபாவ், ஜியாச்சிங்லின் முதலிய கட்சி மற்றும் நாட்டுத் தலைவர்கள் இந்நிறைவு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் தலைவர் வூபாங்குவோ கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் மக்கள் தொகை விகிதாச்சாரத்தின் படி தேசிய மக்கள் பேரவை பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பது சீன நிலைமைக்கு ஏற்ற வழிமுறையாகும். இது பல்வேறு தேசிய இன மக்களின் கூட்டு நலனுக்குப் பொருந்தியது. மக்கள் அனைவரும் சமநிலையில் உள்ளனர். பிரதேசங்கள் அனைத்தும் சம நிலையிலும், அனைத்து தேசிய இனங்களும் சமநிலையிலும் உள்ளன போன்ற கோட்பாடுகள் மேலும் வெளிக்காட்டப்பட்டுள்ளன. சோஷியலிச ஜனநாயக அரசியலை வளர்ப்பதற்கு இந்த தேர்தல் வழிமுறை முக்கியத்துவம் வாய்ந்தது என்று வூபாங்குவோ கூறினார்.