கோபன்ஹேகன் மாநாட்டின் தீர்மானத்தை சீனா உயர்வாக மதிப்பிட்டுள்ளது. பல்வேறு நாடுகளுடன் இணைந்து காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் போக்கை சீனா முன்னேற்றப் பாடுபடுவதாக சீன தலைமை அமைச்சர் வென்சியாபாவ் 14ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
காலநிலை மாற்றப் பிரச்சினை மனித குல வாழ்க்கையுடன் தொடர்புடையது. பல்வேறு நாடுகளின் நலனுடன் தொடர்புடையது. உலகின் நீதி நியாயத்துடன் தொடர்புடையது. ஆகவே சீனா பல்வேறு நாடுகளுடன் இணைந்து காலநிலை மாற்றப் பிரச்சினையைச் சமாளிக்கும் போக்கை முன்னேற்ற பாடுபடும் என்று வென்சியாபாவ் உள்நாடு மற்றும் வெளிநாட்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார்.