சீனாவின் வளர்ச்சி எந்த நாட்டுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாது. வளர்ச்சியடையாததோ வளர்ச்சியடைந்ததோ சீனா எவ்விதத்திலும் மேலாதிக்கத்தை நாடவில்லை. என்றுமே அதை நாடாது. அதேவேளையில் ஆக்கப்பூர்வமாக சர்வதேச ஒத்துழைப்பில் சீனா தொடர்ந்து கலந்து கொள்ளும் என்று சீனத் தலைமை அமைச்சர் வென்சியாபாவ் 14ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
சீனாவின் பெருமை சீனாவின் பிடிவாதம் போன்ற கூற்றை தாம் கவனித்ததாக குறிப்பிட்ட வென்சியாபாவ், மக்கள் தொகை அதிகமாக கொண்ட சீனா நடுத்தர வளர்ச்சியடைந்த நாடாக மாறுவது குறைந்தது இந்நூற்றாண்டின் நடுவிலேயே நிறைவேற முடியும் என்று குறிப்பிட்டார். உண்மையாக நவீனமயமாக்கத்தை நனவாக்க நூறு ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். பொறுப்பேற்கும் நாடான சீனா அமைதி வளர்ச்சிப் பாதையை மேற்கொண்டு சர்வதேச ஒத்துழைப்பில் பங்கு கொண்டு தற்போதைய முக்கிய சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளைத் தீர்க்கக் கருதுகின்றது. வளர்ச்சியடையாத நாடுகளுக்கு உதவி வழங்கும் போது சீனா எவ்விதத்திலும் நிர்பந்தத்தைச் சேர்க்காது என்று வென்சியாபாவ் செய்தியாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார்.