சீன-அமெரிக்க உறவு மீட்சியடைந்து சீரடையத் துணைபுரியும் வகையில் அமெரிக்கா பிரச்சினைகளை நுணுக்கமாக கருத்தில் கொண்டு உண்மையாக செயல்பட்டு மூன்று சீன-அமெரிக்க கூட்டறிக்கைகளின் அடிப்படைக்குத் திரும்ப வேண்டும் என்று சீனத் தலைமை அமைச்சர் வென்சியாபாவ் கூறியுள்ளார்.
14ம் நாள் பெய்ஜிங்கில் சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத் தொடர் நிறைவடைந்த பின் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.
அண்மைக் காலத்தில் தலாய் லாமா அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டது தைவானுக்கான ஆயுத விற்பனை உள்ளிட்ட பிரச்சினைகளில் அமெரிக்கா சீன அரசுரிமையையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் அத்துமீறியது. இதனால் இரு நாட்டுறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எதிரெதிர் நிலையை விட உரையாடலே சிறந்தது. கட்டுப்பாட்டை விட ஒத்துழைப்பால் நலன் விளையும் என்பதை இரு நாடுகளின் 30 ஆண்டுகால வரலாறு எடுத்துக்காட்டியுள்ளது. ஆகவே சீனாவும் அமெரிக்காவும் இருநாட்டுறவின் வளர்ச்சியை முன்னேற்றப் பாடுபட வேண்டும் என்று வென்சியாபாவ் குறிப்பிட்டார்.