சீன தேசிய மக்கள் பேரவை மற்றும் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் ஆண்டுக்கூட்டத்தொடர்கள் நிறைவடைந்தன. தைவான் செய்தி ஊடகங்கள் இக்கூட்டத்தொடர்கள் மீது பெரும் கவனம் செலுத்தின.
"இரு கரை உறவின் அமைதி வளர்ச்சி கட்டுக்கோப்பு" உருவாக்கப்பட்டது, அடுத்த காலத்தில் இரு கரை உறவு பற்றிய பெருநிலப்பகுதியின் கொள்கையின் மைய அம்சங்களை விவரிக்கிறது. இரு கரை அரசியல் மற்றும் பொருளாதார உறவைச் சமாளிப்பதில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களின் பக்குவத் தன்மை மற்றும் வெளிப்படைத் தன்மையை இது காட்டுகிறது. தைவானின் Wang Bao செய்தியேடு வெளியிட்ட கட்டுரையில் இதைச் சுட்டிக்காட்டியது.
தைவானின் Lian He Wan Bao செய்தியேடு, மத்திய செய்தி நிறுவனம், Zhong Tian, Dong Sen உள்ளிட்ட தொலைக்காட்சி நிலையங்கள் ஆகியவை, இவ்வாண்டு கூட்டத்தொடர்கள் பற்றி செய்தி வெளியிட்டன.