தென் கொரிய அரசுத் தலைவர் lee myung bak 11ம் நாளிரவு சியோல் நகரில் 20 நாடுகள் குழுவின் தலைவர்களின் 5வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள சியோல் வந்தடைந்த பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு விருந்து அளித்தார். 20 நாடுகள் குழுவின் தலைவர்களின் 5வது உச்சி மாநாடு துவங்கியதை இது எடுத்துக்காட்டுகின்றது.
தென் கொரிய நேரப் படி 11ம் நாளிரவு 7 மணி முதல் இந்த விருந்து தென் கொரியாவின் மத்திய பொருட்காட்சியகத்தில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவ், அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா, 20 நாடுகள் குழுவின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள், ஸபெயின் உள்ளிட்ட அழைப்பை ஏற்ற 20 நாடுகள் குழு சாரா 5 நாடுகளின் தலைவர்கள், ஐ.நா உள்ளிட்ட 7 சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இவ்விருந்தில் கலந்து கொண்டனர்.
இரண்டு நாட்களில் நடைபெறுகின்ற இவ்வுச்சி மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் ஒட்டுமொத்த பொருளாதாரக் கொள்கைக் கட்டுப்பாடு, சர்வதேச நாணய நிறுவனத்தின் சீர்திருத்தம், உலகளவிலான நாணயப் பாதுகாப்பு இணையம் உள்ளிட்ட பிரச்சினைகள் பற்றி விவாதிப்பர்.