தென் கொரியாவில் 20 நாடுகள் குழுவின் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள சீன அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவும் அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமாவும் 11ம் நாள் சியோலில் சந்தித்துரையாடினர். இரு நாட்டுறவு, பொது அக்கறை கொண்ட முக்கிய சர்வதேச மற்றும் பிரதேசப் பிரச்சினைகள் ஆகியவை பற்றி அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு முக்கிய ஒத்த கருத்துக்களுக்கு வந்துள்ளனர்.
இதற்கிடையில் ஹுச்சிந்தாவ் தென் கொரிய அரசுத் தலைவர் Lee Myung-bak , ரஷிய அரசுத் தலைவர் Dmitry Medvedeb ஆகியோரை தனித்தனியாக சந்தித்துரையாடினார். சீன-தென் கொரிய, சீன-ரஷிய இருத்தரப்புறவு, பொது அக்கறை கொண்ட முக்கிய சர்வதேச மற்றும் பிரதேச பிரச்சினைகள் ஆகியவை பற்றி சந்திப்பின்போது கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.