தென் கொரியாவில் 20 நாடுகள் குழுவின் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள சீன அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவும் அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமாவும் 11ம் நாள் சியோலில் சந்தித்துரையாடினர்.
பொருளாதார வர்த்தகம் பிரச்சினை பற்றி அமெரிக்காவுடன் தொடர்ந்து ஆக்கப்பூர்வ தொடர்பு கொண்டு, கருத்து வேற்றுமையை உரிய முறையில் தீர்க்கும் வழிமுறையை நாட சீனா விரும்புகிறது என்று ஹூச்சிந்தாவ் சந்திப்பில் வலியுறுத்தினார். அண்மையில் அமெரிக்கா செயல்படுத்தும் இறுக்கமற்ற நாணயக் கொள்கையில் சீனா கவனம் செலுத்தி வருகிறது. அமெரிக்க தரப்பின் தொடர்புடைய கொள்கை, புதிதாக வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் நலன்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இரு நாடுகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வு மேற்கொண்டு, இரு நாட்டுறவின் வளர்ச்சியைத் தூண்டுவதை அமெரிக்க தரப்பு எதிர்பார்கிறது என்று பராக் ஓபாமா தெரிவித்தார்.