20 நாடுகள் குழு தலைவர்களின் உச்சி மாநாடு 12ம் நாள் சியோல் நகரில் நிறைவடைந்தது. உலகப் பொருளாதார நிலைமை, சர்வதேச நிதி நிறுவனங்களின் சீர்திருத்தம், உலக நிதி பாதுகாப்பு வலைப்பின்னல், நிதி கண்காணிப்புச் சீர்திருத்தம், வளர்ச்சி, வர்த்தகம் உள்ளிட்ட பிரச்சினைகள் பற்றி இம்மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்கள் விவாதித்தனர். தலைவர்கள் அனைவரும் இடம்பெறும் நிழற்படம் எடுக்கப்பட்டது.