சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11வது தேசிய கமிட்டியின் ஆண்டு கூட்டம் மார்ச் 3ம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கில் துவங்குவதற்கு முன் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டி உறுப்பினரான wang hui sheng வட சீனாவில் நிலவிய குடிநீர் மூலவள பற்றாக்குறை, அதன் சமசீரற்ற பரவல் பற்றி உரை நிகழ்த்தினார். கடல் நீரை குடிநீராக்கும் கருத்துருவை நாட்டின் பாதுகாப்பு மற்றும் உயி்ரின சுற்றுச் சூழல் பாதுகாப்பாக கருத்தில் கொள்ள அரசுக்கு யோசனை விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி நெடுநோக்குக் கொள்கைத் தீர்மானத்தை தாமதமின்றி மேற்கொண்டு கொள்கையளவிலான ஆதரவை அதிகரித்து இத்திட்டப்பணியை நிறைவேற்றுவதை விரைவுப்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் 660 நகரங்களில் 508இல் வெவேறான அளவில் குடிநீர் பற்றாக்குறை பிரச்சினை நிலவி வருகின்றது. கடந்த ஆண்டில் வட சீனாவில் நிகழ்ந்த வறட்சியில் தண்னீர் மூலவளத்தின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளதை புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தியுள்ளன.