சீனாவின் திபெத் அமைதி விடுதலை பெற்றதன் 60வது ஆண்டு நிறைவை கொண்டாடும் கூட்டம் 19ம் நாள் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகர் லாசாவில் நடைபெற்றது. சீனாவின் துணை அரசுத் தலைவரும் நடுவண் அரசின் பிரதிநிதிக் குழுவின் தலைவருமான ஷுச்சின்பிங் இக்கூட்டத்தில் உரைநிகழ்த்தி திபெத் பணியை செவ்வனே செய்யும் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
வளர்ச்சியை விரைவுப்படுத்துவது திபெத்தின் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்ப்பதற்கான திறவுக் கோளாகும். மக்களின் வாழ்க்கையை உத்தரவாதம் செய்து சீராக்குவது திபெத்தின் சமூகப் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படை அம்சங்களில் ஒன்றாகும். சோஷியலிச முன்னேற்றப் பண்பாட்டை வெளிக்கொணர்வது திபெத்தில் வாழ்கின்ற பல்வேறு சிறுபான்மை தேசிய இன மக்களின் கூட்டுத் தார்மீக தாயகத்தை உருவாக்குவதற்குத் தேவைப்படும் கோரிக்கையாகும். சமூகத்தின் நிதானத்தைப் பேணிக்காப்பது திபெத்தின் பாய்ச்சல் வளர்ச்சியையும் பல்வேறு சிறுபான்மை தேசிய இன மக்களின் அருமையான வாழ்க்கையையும் நிறைவேற்றுவதற்கான அடிப்படையாக திகழ்கின்றது என்று ஷுச்சின்பிங் தமது உரையில் தெரிவித்துள்ளார்.