சீன துணை அரசுத் தலைவர் ஷுச்சின்பிங்கின் தலைமையிலான நடுவண் அரசின் பிரதிநிதி குழுவின் சில உறுப்பினர்கள் 21ம் நாள் நிங்சிக்குச் சென்று அங்கு வாழ்கின்ற பல்வேறு தேசிய இன அலுவர்களையும் மக்களையும் சந்தித்தனர். அப்போது அங்குள்ள விடுதலை படையின் தளபதிகள் படைவீரர்கள் உள்ளிட்ட இராணுவ வீரர்களுக்கு அன்பான வணக்கத்தைத் தெரிவித்தனர்.
திபெத் அமைதியாக விடுதலை பெற்ற கடந்த 60 ஆண்டுகளில் நிங்சி பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள தலைகீழான மாற்றங்களை ஷுச்சின்பிங் முழுமையாக உறுதிப்படுத்தினார். இங்குள்ள பொருளாதார வளர்ச்சி நிலைமை சீராக உள்ளது. சமூகத்தின் பல்வேறு துறைகள் பன்முகங்களிலும் முன்னேற்றமடைந்துள்ளன. மக்களின் வாழ்க்கை தரம் பெருமளவில் உயர்ந்துள்ளது. தேசிய இனங்களின் ஒற்றுமை, சமூகத்தின் நிதானம் உள்ளிட்ட செழுமையான காட்சிகளைக் கண்டு நடுவண் அரசுப் பிரதிநிதிக் குழுவினர் ஆறுதலையும் மன நிறைவையும் அடைவதாக துணை அரசுத் தலைவர் ஷுச்சின்பிங் குறிப்பிட்டார்.