2011ம் ஆண்டு நேபாள சுற்றுலா ஆண்டு என்பதை வாய்ப்பாக கொண்டு, ஒத்துழைப்பை வலுவாக்கி, இரு நாட்டு சுற்றுலா வளர்ச்சியை தூண்ட சீனாவும் நேபாளமும் முயற்சிகள் மேற்கொள்ளும். மேலும், மக்களிடையே இரு தரப்புத் தொடர்புகளை அதிகரிப்பது, இரு நாட்டு மக்களின் நட்புறவை வலுப்படுத்துவது தொடர்பான துறைகளில் பரிமாற்றம் மேற்கொள்ளவும் இரு தரப்பும் பாடுபடும்.
நேபாளத்துக்கான சீனத் தூதர் வாங் ஹுவ் லான் அண்மையில் காட்மாண்டில் நேபாள உணவக சங்கத்தின் தொடர்புடைய தலைவரைச் சந்தித்துபேசியபோது இதைத் தெரிவித்தார். இரு நாடுகளும், பண்பாடு, பொருளாதாரம், சுற்றுலா உள்பட பல துறைகளில் ஒத்துழைப்பு மேற்கொள்வதை சீனா ஆதரிக்கிறது என்றார் அவர்.