இந்திய தலைமையமைச்சர் Manmohan Singh செப்டம்பர் திங்கள் 6ம் நாள் வங்காளதேசத்தின் தலைநகரான Dhaka சென்றடைந்து, 2 நாள் நீடிக்கும் பயணத்தைத் துவக்கினார்.
Dhaka சென்றடைந்த பிறகு, வங்காளதேசத் தலைமையமைச்சர் Sheikh Hasina அம்மையாருடன் Manmohan Singh பேச்சுவார்த்தை நடத்தினார். பொருளாதார ஒத்துழைப்பு, கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு, எல்லை நிர்வாகம், நதி நீரை கூட்டாக பயன்படுத்துவது முதலியவை இப்பேச்சுவார்த்தையின் உள்ளடக்கமாகும். பேச்சுவார்த்தைக்கு பிறகு, பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கையிலும் எல்லை நிர்வாக வலுப்படுத்துவது பற்றிய விருப்ப பத்திரத்திலும் இரு நாட்டு தலைவர்கள் கையொப்பமிட்டனர்.