இந்தியாவில் வட்டி விகிதம் அதிகரிப்பு
2011-10-25 17:12:52 cri எழுத்தின் அளவு: A A A
முக்கிய வட்டி விகிதத்தில் 25 விழுக்காட்டை அதிகரிப்பதாக இந்திய மத்திய வங்கி 25ம் நாள் வெளியிட்ட நாணய கொள்கை அறிக்கையில் அறிவித்தது. 2010ஆம் ஆண்டு மார்ச் திங்கள் முதல் இந்திய மத்திய வங்கி, வட்டி விகிதத்தை அதிகரிப்பது இதுவே 13வது முறையாகும். இந்த வட்டி விகித அதிகரிப்பு அளவு, சந்தை முன்மதிப்பீட்டுக்கு ஏற்றதென கருதப்படுகிறது. இதற்கிடையில், இவ்வாண்டு ஏப்ரல் திங்கள் முதல் நாள் துவங்கியுள்ள நடப்பு நிதி ஆண்டின் பொருளாதார அதிகரிப்பு முன்மதிப்பீட்டை, முந்தைய 8 விழுக்காட்டிலிருந்து 7.6 விழுக்காடாக குறைப்பதாக இந்திய மத்திய வங்கி அறிவித்தது.
தொடர்புடைய செய்திகள்