• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நடுவண் அரசின் தொழில் நிறுவனங்கள் திபெத்தில் முதலீட்டைப் பெருக்கும்
  2012-03-03 11:19:53  cri எழுத்தின் அளவு:  A A A   

12வது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில், திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் வகையில், நடுவண் அரசைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள் எட்டாயிரம் கோடி யுவானை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக, சீனத் தேசியச் சொத்துக் கண்காணிப்பு மற்றும் நிர்வாகக் கமிட்டியின் இயக்குநர் வாங்யுங் 2ம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.

அன்று பெய்ஜிங்கில் நடைபெற்ற நடுவண் அரசின் தொழில் நிறுவனங்கள் திபெத்துக்கு உதவியளிக்கும் பணி பற்றிய கலந்துரையாடலில் பேசிய போது அவர் இவ்வாறு கூறினார். சுற்றுலாத் துறை, வேளாண் மற்றும் கால்நடை உற்பத்திப்பொருட்களின் பதனீட்டுத்துறை, சிறுபான்மை தேசியக் கைவினைத் தொழில் முதலிய தனிச்சிறப்பான தொழில் துறைகளில் திபெத்தின் வளர்ச்சிக்கு நடுவண் அரசின் தொழில் நிறுவனங்கள் உதவியளித்து, திபெத்தின் அடிப்படை வசதிகளின் கட்டுமானத்தை வலுப்படுத்தி, உள்ளூர் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040