மேலும், 217வது மற்றும் 218வது தேசிய நெடுஞ்சாலைகள் செல்லும் மலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்தப் பாதைகள் தடைப்பட்டுள்ளன. தற்போது, பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மீட்புதவி நடவடிக்கைகளை மேற்கொள்ள, பராமரிப்பு மீட்புதவிப் பிரிவுகள், பெரிய ரக இயந்திரங்கள் ஆகியவற்றை, போக்குவரத்து வாரியம் அனுப்பியுள்ளது.
இந்நிலநடுக்கத்தின் பாதிப்பால் இடைநிறுத்தப்பட்ட 32 சரக்குத் தொடர்வண்டிகள் அனைத்தும், அதே நாள் 10:45 மணியளவில் இயல்பான போக்குவரத்தைத் துவங்கின.
இதற்கிடையில், மூன்றாவது நிலை முன்னெச்சரிக்கையை விடுத்து, அதற்கான அவசரப் பணிகளைச் சீன நிலநடுக்க வாரியம் துவக்கியுள்ளது.