© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 37 ஆயிரத்து 975 பேர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுள் 480 பேர் உயிரிழந்துள்ளனர். அதனையடுத்து இந்தியாவில் கரோனா வைரசின் மொத்த பாதிப்பு 91 லட்சத்து 77 ஆயிரத்து 840ஆக அதிகரித்துள்ளது. இவர்களுள் 1 லட்சத்து 34 ஆயிரத்து 218 பேர் உயிரிழந்துள்ளனர். 86 லட்சத்து 4 ஆயிரத்து 955 பேர் குமைடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று இந்தியச் சுகாதார அமைச்சகம் 24ஆம் நாள் காலை தெரிவித்துள்ளது.
இதனிடையில் இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடி தொற்று நோய் தடுப்பு நிலைமை தொடர்பாக இன்று காணொலி கூட்டத்தை நடத்தி, தொற்று நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு மற்றும் கட்டுபாட்டு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவுள்ளார்.