உலகளவில் வறுமை ஒழிப்புக்கான புத்தாக்கச் சீர்திருத்தம்
2020-11-25 10:38:14

2020ஆம் ஆண்டு உலக வறுமை ஒழிப்புக் கூட்டுறவு பற்றிய ஆய்வரங்கு 24ஆம் நாள், கான்சு மாநிலத்தின் லொங்நான் நகரில் தொடங்கியது. இதில் கலந்து கொண்டோர் கரோனா வைரஸ் பரவலுக்கு பிறகு, உலகளவில் வறுமை ஒழிப்புப் புத்தாக்கம் மற்றும் ஒத்துழைப்பு மேற்கொள்வது குறித்து விவாதித்தனர்.  

சீனச் சர்வதேச வறுமை ஒழிப்பு மையம், ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு, ஐ.நாவின் உலக தானியத் திட்ட ஆணையம் முதலியவை இணைந்து இந்த ஆய்வரங்கினை நடத்தின.