கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட செர்பிய சுகாதார அமைச்சர்
2021-01-20 11:03:00

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட செர்பிய சுகாதார அமைச்சர்_fororder_1127001738_16110674536921n

சீனாவின் சீனோபார்ம் நிறுவனத்தால் ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசியை, செர்பியாவின் சுகாதார அமைச்சர் ஸ்லாடிபோர் லோன்சார் ஜனவரி 19ஆம் நாள் நாட்டிலேயே முதன்முதலாகப் போட்டுக் கொண்டார்.

தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் பேசிய அவர், சீனாவின் சீனோபார்ம் நிறுவனத்தின் தடுப்பூசி உள்ளிட்ட மூன்று வகை கரோனா தடுப்பூசிகள், செர்பியாவில் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சீனாவின் தடுப்பூசி பாதுகாப்பானதாகவும் பயன் அளிப்பதாகவும் உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், செர்பியாவில் தடுப்பூசிப் போட்டுக் கொள்ளும் ஒரேயொரு வழிமுறை மூலம் மட்டுமே கரோனாவைத் தடுக்க முடியும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.