மக்களின் வாழ்க்கை மீது அமெரிக்க அரசியல்வாதிகளின் பராமுகம்
2021-02-23 20:24:07

பிப்ரவரி 22ஆம் நாள் வரை அமெரிக்காவில் புதிய ரக கரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 5 இலட்சத்தைத் தாண்டியது. இது, இரண்டு உலகப் போர்கள் மற்றும் வியட்நாம் போரில் உயிரிழந்த மொத்த அமெரிக்கப் படையினர்களின் எண்ணிக்கையை விட அதிகம்.

இந்த குளிர்காலத்தில் புயல் காற்றால் 76 அமெரிக்கர்கள் உயிரிழந்தனர்.

கடந்த ஓராண்டில், அமெரிக்கக் கட்சி போராட்டத்தில் எதிர்கட்சிகள் ஆதரித்த அனைத்தையும் நாங்கள் எதிர்க்கின்றோம் என்ற நிலைமை எட்டியுள்ளது. அங்கு, எந்தவொரு பிரச்சினையையும் அரசியல் மயமாக்கம் செய்ய முடிகிறது.

மக்களின் வாழ்க்கை, பாதுகாப்பு மற்றும் நலன்களை அமெரிக்க அரசியல்வாதிகள் கருத்தில் கொள்ளாவிடின், அவர்கள் இறுதியில் மக்களால் கைவிடப்படுவார்கள்.