வாங்யி-ஜெய்சங்கர் தொலைபேசித் தொடர்பு
2021-02-26 10:46:32

சீன வெளியுறவு அமைச்சர் வாங்யி, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் தொலைபேசி மூலம் பிப்ரவரி 25ஆம் நாள் தொடர்பு கொண்டார்.

வாங்யி கூறுகையில், இரு நாட்டுத் தலைவர்கள் எட்டியுள்ள நெடுநோக்குப் பொது கருத்தைப பின்பற்றி, பெரிய அண்டை நாடுகளுக்கிடையில் ஒன்றிடம் ஒன்று நம்பிக்கை கொண்டு சரியான பாதையில் நடைபோட வேண்டும். எல்லைப் பிரச்சினையை உரிய முறையில் தீர்த்து, இரு தரப்புறவு கெட்ட சூழ் நிலையில் சிக்குவதைத் தவிர்க்க வேண்டும். இரு பெரிய பொருளாதாரச் சந்தைகள் கையோடு கையோர்த்து வளரும் திசையில் நிலைநிற்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ஜெய்சங்கர் கூறுகையில், இரு நாட்டுறவு நீண்டகால வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த நிலைமையிலிருந்து தொடங்கி, இரு நாட்டுத் தலைவர்கள் எட்டியுள்ள முக்கிய பொது கருத்தைச் செயல்படுத்தி, இரு தரப்புறவு வெகுவிரைவில் சரியான பாதைக்குத் திரும்புவதை இந்தியா முன்னேற்ற விரும்புகிறது என்று தெரிவித்தார்.