© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சிரியாவில் ஈரான் ஆதரவளிக்கும் குடிமக்கள் படையினர் மீது வான் தாக்குதல் தொடுக்க அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் 25ஆம் நாள் கட்டளையிட்டார் என்று ஏபி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.
ஈரானின் கிழக்குப் பகுதியில் ஈரானின் ஆதரவைப் பெற்ற குடிமக்கள் படையின் பல இலக்குகள் மீது அமெரிக்கப் படை வான் தாக்குதல் நடத்தியது என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைச்சகம் அன்று தெரிவித்தது. ஈராக்கில் அமெரிக்காவின் இலக்குகள் ராக்கெட்டு குண்டுகளால் தாக்கப்பட்டதற்கு பழி வாங்கும் விதம் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.
உள்ளூர் நேரம் 25ஆம் நாளிரவு, சிரியாவின் கிழக்குப் பகுதியில், சிரியா-ஈராக் எல்லையில் உள்ள அபு காமால் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள பகுதிகள் பல முறை தாக்குதலுக்குள்ளாயிற்று என்று சிரியா ராணுவ வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.