© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்று காரணமாக 2020 – 21 ஆம் கல்வியாண்டில் 9, 10, 11 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளதாக தமிழ்நாட்டு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
கரோனா பெருந்தொற்று காரணமாக ஆசிரியர்களும் மாணவர்களும் எதிர்கொள்ளும் வழக்கத்துக்கு மாறான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும் பெற்றோர்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துகளின் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் மாணவர்கள் கற்க வேண்டிய பாடங்கள் அனைத்தும் தமிழ்நாட்டரசின் கல்வி தொலைக்காட்சி வழி கற்பிக்கப்படும் என்றும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் கருதி பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.