© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
பிப்ரவரி 27-ஆம் நாள் காலை 8மணி வரை, கடந்த 24 மணிநேரத்தில், இந்தியாவில் புதிய ரக கரொனா வைரஸால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16488ஆகும். இதனால், அந்நாட்டில் இத்தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 10இலட்சத்து 79ஆயிரத்து 979ஆகும். அவற்றில், ஒரு கோடியே 7இலட்சத்து 63ஆயிரத்து 451 பேர் குணமடைந்துள்ளனர் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டன.
கடந்த ஒரே வாரத்தில், ஒரே நாளிலும் புதிதாக அதிகரித்த நோயாளிகள் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கைகளும் ஏறிக் கொண்டே செல்கின்றன. இதில், மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரே நாளில் புதிதாக அதிகரிக்கும் நிலைமை மிகவும் தெளிவாக இருக்கிறது என்று அந்த தரவுகளில் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவின் சில பகுதிகளில் உள்ளூர் மக்கள் கண்டிப்பாக கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்றாமல் செயல்படுவது, சமீபத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்த காணரமாகும் என்று இந்திய நிபுணர்கள் தெரிவித்தனர்.
தவிரவும், நோய் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட பணிக் குழுக்களை 10 மாநிலங்களுக்கு இந்திய சுகாதார அமைப்பு 26-ஆம் நாள் அனுப்பியது.