கரோனாவால் பாதிக்கப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு ஹோட்டல்-டோக்கியோ
2021-04-12 10:40:30

டோக்கியோ ஒலிம்பிக் அமைப்புக் கமிட்டி ஒலிம்பின் போது விளையாட்டு வீரர்கள் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டால் அவர்களைத் தனிமைப்படுத்துவதற்காக ஒலிம்பிக் கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு ஹோட்டலில் 300 அறைகளை ஏற்பாடு செய்துள்ளதாக ஜப்பானின் செய்தி ஊடகங்கள் 11ஆம் நாள் தெரிவித்துள்ளன.

விளையாட்டு வீரர்களை ஒலிம்பிக் கிராமத்திலிருந்து இந்த ஹோட்டலுக்கு ஏற்றிச் செல்லும் வகையில், ஓட்டுநருக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கும் சுமார் 30 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட உள்ளன.