போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2021ஆம் ஆண்டு கூட்டம்
2021-04-12 14:02:51

போ ஆவ் ஆசிய மன்றம் நிறுவப்பட்ட 20ஆவது ஆண்டு இவ்வாண்டாகும். 19 ஆண்டுகளுக்கு முன்பு ஏப்ரல் 12 ஆம் நாள் போ ஆவ் ஆசிய மன்றத்தின் முதல் ஆண்டு கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இதன் அளவு மற்றும் செல்வாக்கு தொடர்ந்து விரிவாகி வருகின்றது. இவ்வமைப்பு, பல்வேறு தரப்புகளிடையே ஒருமித்த கருத்தை உருவாக்குவது, கூட்டு வளர்ச்சியை முன்னேற்றுவது, ஆசிய மற்றும் உலகளாவிய பிரச்சினைகளை தீர்ப்பது ஆகியவற்றுக்கான முக்கியமான தளமாக மாறியுள்ளது.

வரும் ஞாயிற்றுகிழமை முதல், போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2021ஆம் ஆண்டு கூட்டம் நடைபெற உள்ளது. ஆழ்ந்த கலந்துரையாடல் மூலம், பல்வேறு தரப்புகளும் உலக வளர்ச்சி மற்றும் உலக மேலாண்மை மேலதிக பொது கருத்துக்களை உருவாக்குதல்,  மேலாண்மையை மேம்படுத்துதல், உலகப் பொருளாதாரத்தை உயர்த்துதல் ஆகியவற்றுக்கான திட்டத்தை இவ்வாண்டு போ ஆவ் கூட்டம் வழங்கும் என்று பல்வேறு துறையினர்கள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.