புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சுகாதார வழிகாட்டு நெறிகளை பின்பற்ற வேண்டும்: இலங்கை ராணுவ தளபதி அறிவுறுத்தல்!
2021-04-13 15:31:07

இலங்கையின் ராணுவ தளபதியும், கோவிட் -19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான சவேந்திர சில்வா திங்களன்று தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சுகாதார வழிகாட்டு நெறிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

வீடுகளை விட்டு வெளியேறும்போது முகமூடி அணிய வேண்டும் என்றும் வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க பெரிய கூட்டங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் சில்வா கேட்டுக்கொண்டார்.

இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி, நாட்டில் மொத்தம் 95,131 பேருக்கு கோவிட்-19 நோய் பாதித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.