புகுஷிமா அணு கழிவு நீரைக் கடல்வழியே வெளியேற்ற ஜப்பான் முடிவு - சீனா கவலை
2021-04-13 15:53:33

விபத்துக்குள்ளாகிய  புகுஷிமா அணு மின் நிலையத்தின் கழிவு நீரை கடல் வழியாக வெளியேற்ற ஜப்பானிய அரசு 13ஆம் நாள் தீர்மானித்துள்ளது. ஜப்பானின் அண்டை நாடாகவும் நலன் சார்ந்த தரப்பாகவும் இருக்கும் சீனாவுக்கு இது கடும் கவலையை அளிப்பதாகச் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அன்று நிகழ்த்திய உரையில் தெரிவித்தார்.

மேலும் ஜப்பானின் முடிவு குறித்து சீனா சர்வதேச சமூகத்துடன் இணைந்து கவனம் செலுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.