மங்கோலிய அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட குரேல்சுக்கு ஷிச்சின்பிங்கின் வாழ்த்து
2021-06-11 17:14:07

ஜூன் 11ஆம் நாள் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் குரேல்சுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, அவர் மங்கோலிய அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட வாழ்த்து தெரிவித்தார்.

ஷிச்சின்பிங் தனது வாழத்தில் கூறுகையில், சீனாவும் மங்கோலியாவும் அன்பான அண்டை நாடுகளாகவும் உளமார்ந்த ஒத்துழைப்புக் கூட்டாளிகளாகவும் உள்ளன. தற்போது, இரு நாட்டுறவு சீராக வளர்ந்து வருகிறது. கரோனா வைரஸ் பரவல் நிகழ்ந்த பின், இரு நாட்டு அரசுகளும் மக்களும் கூட்டாக வைரஸ் பரவலைத் தடுத்து, சிறந்த சாதனைகளைப் பெற்றுள்ளனர். சீன-மங்கோலிய உறவின் வளர்ச்சியில் சீனா அதிக கவனம் செலுத்தி வருகிறது. மங்கோலியாவுடன் இணைந்து, இரு நாட்டுப் பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவில் புதிய முன்னேற்றங்களை இடைவிடாமல் பெறப் பாடுபட விரும்புகிறோம் என்று தெரிவித்தார்.