ஏழு நாடுகள் குழு உச்சிமாநாடு
2021-06-12 17:11:40

ஏழு நாடுகள் குழு உச்சிமாநாடு 11ஆம் நாள் பிரிட்டனின் கார்ன்வால் நகரிலுள்ள கபிஸ் பேவில் நடைபெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏழு நாடுகள் குழுவின் தலைவர்களுக்கிடையில் நடந்த முதலாவது நேருக்கு நேர் சந்திப்பு இதுவாகும். இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பல தரப்புகள் அன்று நடத்திய வட்ட மேசைக் கூட்டத்தில், கரோனா வைரஸ் பரவலுக்குப் பின், உலகப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தின.

இந்த உச்சிமாநாடு நடைபெற்ற பகுதியில் பல போராட்டங்கள் நடைபெற்றன. காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தடுப்பூசி விநியோகம், சமூக நீதி முதலியவற்றில் ஏழு நாடுகள் குழு "செயலை விட வெற்று வாக்குறுதிகளே அதிகம் அளித்துள்ளன என்று கூறி" போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.