இலங்கை, இந்தியாவில் கொவைட்-19 பாதிப்பு
2021-06-14 18:50:07

இலங்கையில் கொவைட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 23 ஆயிரத்து 638 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 2,300-க்கும் அதிகமானோருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது என்று அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நோய் தொற்றுக்கு இதுவரை 2,136 பேர் உயிரிழந்துள்ளனர். 32 ஆயிரத்து 955 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஏப்ரலில் இருந்து தினமும் சராசரியாக 2,200 பேர் புதிதாக நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். தேசிய அளவில் நடைமுறையில் இருக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் வரும் 21ஆம் தேதியிலிருந்து நீக்கப்பட உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இத்தொற்றுக்கு புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்து 421. 3,921பேர் உயிரிழந்தனர். நாட்டில் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை  தொடர்ந்து ஏழாவது நாளாக ஒரு லட்சத்துக்கும் கீழ் பதிவாகி வருகிறது. அதேபோல், சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் ஒரு லட்சத்துக்கு கீழ் குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களில் முதன்முறையாக இத்தகைய நிலை அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.