ஷிச்சின்பிங் நகுயெனுடன் தொலைபேசி தொடர்பு
2021-09-24 16:34:03

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் 24ஆம் நாள் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் நகுயென் ஃப்ஹு ட்ரொங்குடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார்.

இவ்வாண்டில், நகுயென் ஃப்ஹு ட்ரொங்குடன் நெருங்கிய பரிமாற்றத்தை நான் பல வழிமுறைகளில் மேற்கொண்டு வருகின்றேன். இரு கட்சிகள் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான நெடுநோக்கு பரஸ்பர நம்பிக்கையை ஆழப்படுத்தி, பாரம்பரிய நட்புறவை வலுப்படுத்தி, புதிய நிலைமையில் இரு தரப்புறவின் வளர்ச்சியை நாம் தூண்டி வருகிறோம் என்று ஷிச்சின்பிங் கூறினார்.

நாம் சரியான திசையைப் புரிந்து கொண்டு, ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, சோஷலிச நட்சியத்தை தொடர்ந்து வலுப்படுத்தி, இரு கட்சிகள், இரு நாடுகள் மற்றும் இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களை பேணிக்காத்து, பிரதேச மற்றும் உலக அமைதிக்கும் வளர்ச்சிக்கும் பங்காற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

வியட்நாம்-சீன பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளி உறவுக்கு வியட்நாம் முக்கியத்துவம் அளித்து வருகின்றது. தொற்று நோய் தடுப்பு மற்றும் பொருளாதார சமூக மீட்சியில் சீனா வழங்கிய உதவிக்கு நன்றி என்று நகுயென் ஃப்ஹு ட்ரொங்கு கூறினார்.