சிரியா போரில் 3 இலட்சத்து 50 ஆயிரம் பொது மக்கள் உயிரிழப்பு
2021-09-25 16:32:54

2011ஆம் ஆண்டு மார்ச் முதல், 2021ஆம் ஆண்டு மார்ச் வரை, 3 இலட்சத்து 50 ஆயிரத்து 209 பேர் சிரியா போரில் இறந்தனர் என்று ஐ.நா மனித உரிமை அலுவலுக்கான உயர் நிலை அதிகாரி பாச்லேத் அம்மையார் 24ஆம் நாள் தெரிவித்தார்.

அன்று அவர் ஐ.நா மனித உரிமை செயற்குழுவின் 48ஆவது கூட்டத்தொடருக்கான அறிக்கையை ஒப்படைத்த போது இதை தெரிவித்தார்.