ஆப்கனுக்கு உதவி பற்றி ஐ.நா வேண்டுகோள்
2022-01-14 17:18:28

ஐ.நா தலைமைச் செயலாளர் அண்டோனியோ குட்டரேஸ் ஜனவரி 13ஆம் நாள் கூறுகையில், லட்சக்கணக்கான ஆப்கன் மக்கள் வாழ்க்கை நெருக்கடியில் இருக்கின்றனர். தலிபான் அமைப்பு ஆட்சிக்கு வந்தது முதல் இதுவரை முடக்கி வைக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் சொத்துக்களை அமெரிக்காவும் உலக வங்கியும் விடுவிக்க வேண்டும் என்றார்.

மேலும், ஆப்கனுக்கு 500 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள மனித நேய உதவி தொகையைத் திரட்ட வேண்டும் என்று ஐ.நா மற்றும் பல அரசு சாரா அமைப்புகள் ஜனவரி 11ஆம் நாள் வேண்டுகோள் விடுத்தன.

ஐ.நாவின் புள்ளிவிவரங்களின்படி, 87 லட்சம் ஆப்கன் மக்கள் இப்போது பட்டினி நிலையில் உள்ளனர்.