இந்தியாவின் மும்பைக்குச் சென்ற சீன மகளிர் கால்பந்து அணி
2022-01-16 16:21:57

2022 இந்திய ஆசிய மகளிர் கால்பந்து போட்டியில் கலந்துகொள்ள  சீன மகளிர் கால்பந்து அணி, 15ஆம் நாளிரவு, சீனாவின் ஷாங்ஹாய் மாநகரிலிருந்து புறப்பட்டு, மும்பைக்குச் சென்றது.

2022 ஆசிய மகளிர் கால்பந்து போட்டி ஜனவரி 20ஆம் நாள் முதல், பிப்ரவரி 6ஆம் நாள் வரை, இந்தியாவில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் கலந்துகொள்ளும் 12 அணிகள் 3 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சீனா, இந்தியா, சீன தைபெய், ஈரான் ஆகிய 4 அணிகள் “எ” குழுவில் சேர்ந்துள்ளன.

இப்போட்டியில் முதல் 5 இடங்களை வகிக்கும் அணிகள், 2023ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலந்தில் நடைபெறும் உலக மகளிர் கால்பந்து போட்டியில் கலந்துகொள்ளும் தகுநிலையைப் பெறும்.