திபெத் மக்களின் வாழ்க்கை நாளுக்கு நாள் மேம்படுவதோடு மட்டுமின்றி, பண்பாடு, மற்றும் சமூகம் செழுமையாகவும் நிதானமாகவும், அதே சமயம் மக்கள் அருமையான வாழ்க்கையை தற்போது நடத்தி கொண்டு வருகிறார்கள் என்பதை திபெத் தன்னாட்சி பிரதேசத்தலைவர் பத்மா டி சின்லி அவர்கள் கூற சீன வானொலி மூலம் அறிந்தேன். திபெத் அரசு கடந்த 5 ஆண்டுகளில் 1700 கோடி யுவானை நிதியாக ஒதுக்கி அதன் மூலம் 2 இலட்சத்து 70 ஆயிரம் விவசாய குடும்பங்களுக்கு பாதுகாப்பான வீடுகளை கட்டி தருவதோடு மட்டுமின்றி அவர்கள் குடும்பத்திற்கு முதுமை உதவிதொகை, மருத்துவசெலவு, வேலை இழப்பு, பணியிடைக்காயம், குழந்தை பிறப்பு என 5 காப்புறுதி வகைகளையும் செய்து வருவதையும் அறிந்தேன். இதையெல்லாம் பார்க்கும் போது திபெத் வரலாற்றில் மிகச்சிறந்த காலகட்டத்தில் உள்ளதையே தற்போது காட்டுகிறது.