ரஷியாவில் ஜி-20 அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்துக கொண்ட சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், ரஷிய அரசுத் தலைவர் விளாடிமீர் புதின் இருவரும் 5ஆம் நாள் வியாழக்கிழமை செயின்ட் பீட்டஸ்பெர்க் நகரில் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இரு தரப்புறவு வளர்ச்சி, முக்கியமான சர்வதேச மற்றும் பிரதேச பிரச்சினைகள் ஆகியவை பற்றி இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
அதே நாள் உலக வர்த்தக அமைப்பின் தலைமை இயக்குநர் ராபர்ட் ஆசேவேதோவைச் சந்தித்த போது கூறுகையில், திறந்த நிலை, நீதி, ஒளிமறைவின்மை ஆகியவைகளை அடிப்படையாக கொள்ளும் பல தரப்பு வர்த்தக அமைப்புமுறை, உலக நாடுகளின் பொதுவான நலன்களுக்கு ஏற்றதாக இருக்கும். இந்த அமைப்புமுறையைப் பின்பற்றும் சீனா இதற்கான கட்டுமானத்தில் ஆக்கமுடன் பங்காற்றும் என்று ஷி ச்சின்பிங் உறுதியாகக் கூறினார்.
மேலும், அர்ஜென்டீனா, பிரேசில், மெக்சிகோ ஆகிய நாடுகளின் அரசுத் தலைவர்களையும் ஷி ச்சின்பிங் சந்தித்து பேசினார்.