இப்போது நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது, தாய்ஜிச்சவான் அரங்கேற்ற இசையாகும். பேராசிரியர் வாங் சியாவ் ஜுன்னின் தலைசிறந்த தாய்ஜிச்சுவான் தற்காப்புக் கலை அரங்கேற்றத்தோடு இக்கருத்துரை துவங்கியது. தாய்ஜிச்சுவனின் அடிப்படை தத்துவம், அதனால் விளையும் உடற்பயிற்சி, உடல் நல பாதுகாப்பு வழிமுறை ஆகியவற்றை பேராசிரியர் வாங் சியாவ் ஜுன் முக்கியமாக விவரித்தார். அவர் தாய்ஜிச்சுவன் தத்துவத்தையும், சீனாவின் பாரம்பரிய மருத்துவத் தத்துவத்தையும் இணைத்து, வெளிநாட்டு நண்பர்களுக்கு தாய்ஜிச்சுவனின் தனிச்சிறப்பு வாய்ந்த ஈர்ப்பு ஆற்றலை வெளிப்படுத்தினார். தாய்ஜிச்சுவன் உடல் நலத்தை வலுப்படுத்தி, நோய்களைத் தடுக்கும் அதே வேளையில், மன்மையான சிந்தனையையும் ஒழுக்கங்களையும் உருவாக்கி, மனத்தை தூய்மைப்படுத்த மக்களுக்கு துணைபுரிகிறது என்று வாங் சியாவ் ஜுன் சுட்டிக்காட்டினார். அவர் கூறியதாவது:
"தாய்ஜிச்சுவன், சீனாவில் நீண்டக்கால வரலாறுடையது. மிங் வம்ச இறுதியிலும், சிங் வம்ச துவக்கத்திலும் தான் தாய்ஜிச்சுவன் என்னும் பெயர் இத்தற்காப்புக் கலைக்கு உருவாகியது. தாய்ஜிச்சுவன், எளிய விளையாட்டு அல்ல. அதில் தத்துவம், சமநிலை, இணக்கம் ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. மக்கள் தாய்ஜிச்சுவன் பயிற்சி செய்யும்போது, அதிக உண்மைகளை அறிந்துக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, தாய்ஜிச்சுவன் பயிற்சி செய்வதன் மூலம், மற்றவருடன் பழகிக் கொள்ளும் வழிமுறையை மக்கள் அறிந்துக் கொள்ளலாம். அது மட்டுமல்ல, மற்றவருக்கு மதிப்பளித்தல், இயற்கைக்கு மதிப்பளித்தல், தனது உடலிலுள்ள பல்வேறு பகுதிகளுக்கு மதிப்பளித்தல் ஆகிய கருத்துக்களை அவர்கள் நிலைநாட்டலாம். இது சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த இணக்கக் கருத்தை வெளிப்படுத்துகிறது" என்றார் அவர்.