இதனால் கலை ரீதியில், கலை நுட்ப நுணுக்கமுடைய, நளினம் மிகுந்த குன்ச்சு, பொது மக்களின் கலையழகு உணர்வுகளிடமிருந்து படிப்படியாக விடுபட்டு போனது. அளவுக்கு மீறிய நுட்பங்களில் உருவாக்கபட்ட இசை நாடகப் பாடல் வரிகள், அளவுக்கு மீறிய நீண்டக்கால பாட்டுப் பாணி, அளவுக்கு மீறிய மெதுவான தாளம் ஆகியவற்றால், குன் ச்சு மீதான பொது மக்களின் ஆர்வம் குறைய தொடங்கியது.
அரசு அலுவலர்கள் குடும்ப இசை நாடகக் குழுவாக இருப்பதற்கு சிங் வம்ச அரசு தடை விதித்தது. அதன் காரணமாக, குடும்ப குன்ச்சு இசை நாடகக் குழுக்கள் நிலவாமல் விட்டன. இலக்கியப் பிரமுகர்கள் நற்குடியாளர்கள் ஆகியோருக்கும், குன் ச்சு இசை நாடகத்துக்குமிடை இருந்த நெருக்கமான தொடர்பில் சீர்குலைவு ஏற்பட்டது. இறுதியில் குன்ச்சு, மிக முக்கிய சமூக அடிப்படையை இழந்து, வீழ்ச்சியடைந்து வந்தது.